டிஎன்பிஎஸ்சி பொறியியல் பிரிவு தேர்வு
சென்னை,ஜன.5- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு திட்டமிட்டபடி ஜன.6, 7-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்து தேர்வு ஜனவரி 6, 7 ஆம் தேதிகளில் (சனி ஞாயி்று்) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளன. ஒருங்கிணைந்த பொறியியல் பணி களுக்கான பல்வேறு துறைகளில் உள்ள 369 காலிப் பணியிடங்களுக்கான அறி விப்பை டிஎன்பிஎஸ்சி முன்னதாக வெளி யிட்டு இருந்தது. இப்பணிக்கு தமிழகம் முழுவதும் 59,630 பேர் விண்ணப்பித்தி ருந்தனர். இதற்கான தேர்வு வரும் ஜன.6, 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தென் மாவட்டங் களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் இடையே கோரிக்கைகள் எழுந்த நிலை யில், திட்டமிட்டபடி தேர்வு நடைபெற உள்ளது.
4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்
சென்னை,ஜன.5- வடகிழக்கு பருவமழை தமிழ் நாட்டில் தென் மற்றும் வட மாவட்டங்க ளில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக் கப்பட்டது. வெள்ள நீர் பல்வேறு இடங்க ளில் தேங்கியதால் ஒரு வார காலமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட் டது. இதனால் மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. பாடங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் பாதிப்படைந்தனர். இதையடுத்து மழைக்காக விடுமுறை விடப்பட்ட நாட்களுக்கு ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் மற்றும் தேர்வு நடத்தவும் அந்தந்த மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து சென்னையில் 4 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 6 மற்றும் 20 ஆம் தேதிகளில், பிப்ரவரி 3 மற்றும் 17 ஆம் தேதிகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பாட வேளைகள் பின்பற்றி பாடங்களை நடத்த வேண்டும் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வோர் அதிகரிப்பு!
சென்னை,ஜன.5- தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி களை முடித்தவர்கள் 64,13,675 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். பள்ளி, கல்லூரிகளை முடித்த வர்கள் வேலை வாய்ப்புக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். அவர்க ளுக்கு வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களை வேலைவாய்ப்பு அலு வலகங்கள் அளித்து வருகின்றன. இந்த நிலையில், 2023 டிசம்பர் 31 ஆம் தேதி படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வர்களின் விவரங்கள் வெளியாகி யுள்ளன. அந்த வகையில், 2023 டிசம்பர் 31 ஆம் தேதி படி 64,13,675 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்க ளில் பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 29,73,923 பேரும், பெண் கள் 34,39, 455 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 297 பேரும் பதிவு செய்துள்ளனர். இதில் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 14,94,409 பேர் மற்றும் 31 முதல் 45 வயது வரை அரசு பணி வேண்டி காத்திருப்ப வர்கள் 17, 86, 200 பேர் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6,872 பேர் உள்ளனர், இந்த எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் 1,48, 856 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.