திண்டுக்கல் ஆட்சியரிடம் தீ.ஒ.முன்னணி புகார்
திண்டுக்கல், மே 7- பட்டியலின ஊராட்சித்தலை வியை செயல்படவிடாமல் சாதிய வன்மத்துடன் நடந்துகொள்ளும் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சித் துணைத்தலைவர் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே உள்ளது ஜம்பு துரைகோட்டை ஊராட்சி. இங்கு ஊராட்சித்தலைவராக இருப்ப வர் கா.பவுன்தாய். இவர் பட்டிய லினத்தைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சியின் துணைத்தலைவராக இருப்பவர் சிவராமன். கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலினத்தைச் சேர்ந்த பவுன்தாயை தலைவராக செயல்படவிடாமல் துணைத்தலை வர் சிவராமன் சாதிய வன்மத்து டன் செயல்பட்டு வருகிறார். அலுவலக பெயர் பலகையில் தலைவர் பெயரைக்காட்டிலும் தன் னுடைய பெயர் பெரிய எழுத்தில் இருக்க வேண்டும் என்று தகராறு செய்கிறார். ஊராட்சி அலுவல கத்தில் சி.சி.டி.வி. கேமரா வைக்கக் கூடாது. ஊராட்சி தலைவர் தனது காரில் கூட ஊராட்சித்தலைவர் என்று பெயர் எழுதக்கூடாது என மிரட்டுகிறார்.
இது தொடர்பாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தால் துணைத்தலைவ ரோடு இணக்கமாக அனுசரித்து செல்ல வேண்டும் என்று ஊராட்சித் தலைவருக்கு அதிகாரிகள் அறி வுரை கூறுகிறார்கள். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கூறி யதை கேள்விப்பட்ட துணை தலை வர் சிவராமன் ஊராட்சி மன்ற அலு வலகத்திற்கு சில ரவுடிகளை அழைத்து வந்து பொதுமக்கள் மத்தியில் ஒரு பெண் தலைவர் என்று கூட பார்க்காமல் சாதியைச் சொல்லி அசிங்கமாக திட்டியும் ஆடையை கழற்றிக்கொண்டு ஆபாசமாக நடந்து கொண்டனர். இது தொடர்பாக அம்மையநாயக்க னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தீண் டாமை வன்கொடுமை தடுப்புச்சட் டத்தில் வழக்கு பதியப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பட்டியலின ஊராட்சித்தலைவ ருக்கு துணைத்தலைவர் கொடுக் கும் சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பூங்கொடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந் நிகழ்வில் ஊராட்சித்தலைவர் பவுன்தாய், அவரது கணவர் காட்டு ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்கள் எம்.ஆர். முத்துச்சாமி, கே.டி.கலைச்செல் வன், ஆர்.வனஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.