திருவில்லிபுத்தூர், பிப்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளராக இருப்பவர் சசிகுமார் .இவரது சொந்த ஊர் அச்சம் தவிர்த்தான் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு அச்சம் தவிர்த்தான் கிராமம் ஆகும் இந்த கிரா மத்தில் தனது மனைவி மற்றும் மகன்கள் பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் கட்சி பணிக்காக காலை யில் வீட்டை விட்டு செல்பவர் இரவு நேரத்தில் வீடு திரும்பு வார். இந்நிலையில் இவருடைய கிராமத்தில் சட்ட விரோ தமாக எஸ்விஎஸ் ப்ளூ மெட்டல் மற்றும் கே.எம்.சி நிறு வனம் இரண்டும் இணைந்து நன்கு விளையக்கூடிய விவ சாய நிலங்களை அழிக்கும் நோக்கத்தோடு கிராம மக் களை அச்சுறுத்துகிற வகையில் கல்குவாரி மற்றும் கிரசர் அமைக்கின்ற பணிகளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பி ருந்து செய்து வருகின்றனர் .இந்நிலையில் அந்த கம்பெனி குறித்து தகவல் அறிந்து அச்சம் தவிர்த்தான் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கல்குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து கடந்த ஒரு வருட காலமாக உண்ணா விரதம் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளரான எஸ்.வி.சசிகுமார் உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக ஒன்றிய செயலாளர் சசிகுமாரை முன்பின் தெரியாத நபர்கள் பின் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர் இச்சம்பவம் குறித்து கட்சியின் ஒன்றிய செயலாளர் சசிகுமார் புதன்கிழமையன்று திருவில்லி புத்தூர் உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, அச்சுறுத்துபவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட திருவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சபரிநாதன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ரேணுகாதேவி, கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி, நகர செய லாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.