districts

img

35 ஆண்டு பணியாற்றியவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, அக்.24 - திருச்சி மேலப்புலிவார் சாலையில் நாகப்பா கார்ப்பரேசன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இரண்டு தலைமுறையாக சுமைப்பணித் தொழி லாளர்கள் வேலை செய்து வருகின்ற னர்.  இந்நிலையில், இந்நிறுவனம் தனது  பெயர் மற்றும் இடத்தை மாற்றி கடந்த 35 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்காமல் வேறு தொழிலா ளர்களுக்கு வேலை கொடுத்துள்ளது.  இதனை கண்டித்தும் நாகப்பா கார்ப்பரேசனில் வேலை பார்த்த 75 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரியும் சிஐடியு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று குடும்பத் துடன் உள்ளிருப்பு பட்டினி போராட்டம்  அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாகப்பா கார்ப்பரேசன் நிறுவனம் திங்க ளன்று கடையை திறக்கவில்லை. இருந்தபோதிலும், கடைவாசல் முன்பு  சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத் துடன் அமர்ந்து பட்டினிப் போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நாகப்பா கார்ப்ப ரேசன் சுமைப்பணி சங்க தலைவர் பழனி  தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர்  மாவட்டச் செயலாளர் ராஜா போராட் டத்தை துவக்கி வைத்தார். போராட் டத்தை விளக்கி சங்க செயலாளர் சண் முகம், மாநிலக் குழு உறுப்பினர் சின்ன துரை, காந்தி மார்க்கெட்  கிளைச் செய லாளர் பிரபு ஆகியோர் பேசினர். இதில்  சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத் துடன் கலந்து கொண்டனர்.