மதுரை, அக்.3- சக்கிமங்கலம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் இடையூறு விளைவித்தவர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சி யில் திங்களன்று கிராமசபைக்கூட்டம் ஊரா ட்சித் தலைவர் கே.நாகலெட்சுமி தலைமை யில் நடைபெற்றது. கிராம மக்கள் உள்ளிட்ட சில அமைப்பினரும் கிராமத்திற்கு வரும் வழியில் உள்ள பாலத்திற்கு மின்விளக்கு வசதி, தெருவிளக்கு, சாலை வசதி கேட்டு மனு அளித்தனர். இருப்பினும் வீட்டுமனை கேட்டு சிலர் வீட்டுமனை வழங்கவேண்டு மென விவாதிக்கத் தொடங்கினர். ஒரு கட் டத்தில் காவல்துறையினர் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசம் ஏற்படா ததைத் தொடர்ந்து நான்கு முதல் ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்த னர். இது குறித்து செவ்வாயன்று ஊராட்சித் தலைவர் கே.நாகலெட்சுமியிடம் பேசிய போது, கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற் றது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். சிலர் வீட்டு மனை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். ஏற்கனவே சிட்கோ, பத்திரிகையாளர்களுக்கு இங்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. நான் ஊராட்சித் தலைவராக வந்த பின் யாருக்கும் இடம் வழங்கவில்லை. அதிகாரிகளோ, ஊராட்சி யில் இடமில்லை என்கின்றனர். வீட்டுமனை கேட்டு மனு அளித்தவர்களின் மனுக்கள் நிச்ச யம் பரிசீலிக்கப்படும். அதிகாரிகளின் கவ னத்திற்குக் கொண்டு சென்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எவ்வ ளவு முயற்சி செய்தாலும், அனைவரையும் ஒருங்கிணைத்து விவாதம் நடத்துவதில் சிர மம் உள்ளது” என்றார். அரசு இலவசமாக வழங்கும் இடங் களை ஒதுக்கீடு செய்வதில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆட்சியர் உரிய விசா ரணை நடத்த வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் க.சோணை கூறுகை யில், “கல்மேடு-இளமனூர் இடையிலான சாலை மிகவும் மேசமாக உள்ளது. இளம னூர் புதூரில் தெருவிளக்குகள் இல்லை. அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காவிரிக் குடிநீர் ஒரு மாதம் வந்தது. இப்போது வரு வதில்லை. ஒரு சிலர் லாரிகளில் வரும் சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீரை விலை கொடுத்து வாங்குகின்றனர்” என்றார். இரணியத்தில் கிராமசபை பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச் சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சௌ.சங்கீதா இரணி யம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சி களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட சிலார்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டம் மட்டும் நடைபெறவில்லை.