மதுரை, ஜூன் 15- மதுரை மாநகராட்சி வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவ்வை மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடு தல் வகுப்பறை கட்டிடத்தை தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஜூன் 15 அன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மேயர் வ.இந்தி ராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ்சேகர்,, மாநக ராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணைமேயர் தி.நாக ராஜன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதன்படி வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவ்வை மாநக ராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் படிக்கும் மாணவிகளின் வச திக்காக 2019-2020 ஆம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டி டம் அமைச்சரால் திறந்து வைக்கப் பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் ஒரு வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.