districts

தூத்துக்குடி : அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்...

தொழில்நுட்ப வளர்ச்சியின் தவறான பயன்பாட்டின் விளைவாக, குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு மட்டுமே சிறந்த வழி என்கின்ற னர் துறைசார்ந்த வல்லுனர்கள். இந்தியா முழுவதும் இணைய குற்றம் எனப்படும் சைபர் கிரைம் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக இந்த கணினி யுகத்தில் ஆண்ட்ராய்டு போன் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. பெரியவர்களை விட பல  வீடுகளில் குழந்தைகள் கைகளில்தான் ஆண்டராய்டு எனப்படும் தொடுதிரை அலை பேசிகளை பார்க்க முடிகிறது. நாம் விரும்பும் உணவு முதல் அனைத்து பொருட்களையும் நம் வீடுகளுக்கு வந்து தருவது, தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்க ளை எளிமையான முறையில் இந்த ஆண்ட்ராய்டு போன் மூலம் பெற முடிகிறது, எனினும் இதனால் ஏற்படும் தீமைகளுக்கோ பஞ்சமில்லை. பொழுதுபோக்கிற்காக ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தக்கூடிய இளைய தலை முறையினர் முறையற்று கையாளுதலால் சிக்கல்களில் சிக்கித்தவிக்கின்றனர். ஒருசில நேரங்களில் இணையவழி குற்றங்கள் மர ணத்தில் முடிகின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.

இணையவழி குற்றங்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 385 ஆக இருந்த குற்றங்கள், 2020 ஆம் ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்து 782 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழு வதும் இது போன்ற இணைய வழி குற்றத்திற்கு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் ஒரு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனி காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் மேற்பார்வையில் கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான காவல் நிலை யம் துவங்கப்பட்டு,  மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரு கிறது. இதில் கூடுதல் துணை காவல் கண்கா ணிப்பாளர் இளங்கோவன், காவல் ஆய்வா ளர் சிவசங்கரன், 2 உதவி ஆய்வாளர் மற்றும் 12 காவல் துறை அதிகாரிகளுடன் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட் டத்தில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 35 சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் ரூ.30,44,100 வரை மீட்கப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான வெளி மாநில குற்றவாளிகளை நவீன தொழில் நுட்பம் மூலம் விரைந்து பிடித்து பணத்தை மீட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு வெளி நாட்டு நம்பர் மூலம் அவரது மொபைலுக்கு ஆபாச புகைப்படங்க ளை அனுப்பி ஒருவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபர், பாதிக் கபட்ட பெண் மொபைல் ரிப்பேர் செய்ய கொடுத்த போது அவரது புகைப்படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டி வந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் நவீன தொழில் நுட்பம்  மூலம் சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்து உள்ளனர். அதேபோல் தெலுங்கானாவை சேர்ந்த இளைஞரை ஏமாற்றிய வழக்கில் தூத்துக்குடி யை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் திருமண இணையதளம் மூலம் தெலுங்கானாவை சேர்ந்த ஒருவரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டார். திருமண  இணையதளத்தில் போலியான புகைப்படங்க ளை பதிவேற்றி தெலுங்கானாவை சேர்ந்த ஒருவரை ஏமாற்றி ரூ.80,000 வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகா ரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த அப்பெண்ணை கைது செய்தனர்.

அதேபோல் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக் குடி வ.உ.சி. துறைமுகத்தில் கணிப்பொறி டெண்டர் வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவரை நவீன தொழில் நுட்ப வசதியு டன் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சிவசங்க ரன் தலைமையிலான காவல் துறையினர் தெலுங்கானாவிற்கு சென்று துரிதமாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இணைய தளம் மூலம் மோசடி செய்யும் கும்பல்களின் பிடியில் இளைஞர்கள் எளிதாக சிக்கி விடுகின்றனர். தற்போதைய கால கட்டத்தில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முதல் 35 வயதிற்குட்பட்ட இளை ஞர்கள் பலர் இணைய வழி மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளின் பிடியில் சிக்கி விடுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இது போன்று சைபர் குற்றத்தில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு 10 மாதங்களாக வெளி வர முடியாமல் சிறையில் உள்ளார். இது போன்ற இணைய வழி மோசடி யில் சிக்கும் நபரில் 90 சதவீத பேர் தங்கள்  பெற்றோருக்கு தெரியாமல் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு, வீட்டில் இருந்து சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி விடு கின்றனர். இதில் பெரும்பான்மையானோர் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மையான இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் எளிய முறையில் சம்பாதிக்க வேண்டும், அதிக லாபம் பெற வேண்டும் போன்ற நோக்கத்தின் விளைவாக இது போன்ற இணையதள மோசடி கும்பல்களின் பிடியில் சிக்கி விடுகின்றனர். புகார்களின் அடிப்படையிலான விசார ணையில் பெரும்பான்மையான குற்றவாளி கள் பிற மாநிலத்தை சார்ந்தவர்களாக உள்ள னர். சில வழக்குகளில் வெளி நாட்டை சேர்ந்த வர்களும் வருகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள ஒரு வழக்கில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை நமது காவல்துறையினர் விசாரணை செய்து அவர்களை கண்டறிய பிற மாநிலத்திற்கு சென்று பிடித்து வருவதிலும் மிகுந்த சிரமம் உள்ளது. இது போன்ற இணைய வழி குற்றங்க ளை தடுக்க மாநிலங்கள் இடையே உரிய தகவல் பரிமாற்றம் தேவை. விரைந்து குற்ற வாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை  எடுக்க ஒன்றிய அரசு சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் சைபர் குற்றங்களால் பாதிக் கப்படுபவர்களில் 99 சதவிகிதம் பேர் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து புகார் தருவ தில்லை என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஓ.டி.பி மூலமாகவோ, வேறு வகையிலோ  மோசடியாக வங்கி வாடிக்கையாளர் கணக்கி லிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால், உடனே புகார் தெரிவிக்க `National Cyber  Crime Helpline - 155260’  என்ற எண்ணை  சைபர் கிரைம் பிரிவினர்  அறிமுகம் செய்துள்ளனர். பணம் மோசடி செய்யப்பட்ட 24 மணி மணி நேரத்துக்குள் இந்த எண்ணுக்கு அழைத்து, சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து, மோசடி நபரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்க லாம்” என சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள் ளது. மேலும், வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலை யத்துக்கு நேரில் வராமலேயே www.cyber crime.gov.in என்ற வலைத்தளத்திலேயே புகார் அளிக்கலாம். விக்னேஷ்