திண்டுக்கல், ஜூலை 25- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரத்தில் உள்ள மாட்டுச்சந்தையில் கூடு தல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததா ரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றியத்தலைவர் எம்.கருணாகரன், பொருளாளர் தண்டபாணி, சிபிஎம் ஒன்றியச்செயலாளர் சிவமணி, ஆர்.எஸ்.பெரியசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நுழைவுக் கட்ட ணம் ரூ.25 மட்டுமே ஆனால் ரூ.250 வசூலிக்கின்றனர். ஆட்டிற்கு ரூ.100, கோழிக்கு ரூ.70 வசூல் செய்கின்றனர். கோழி வியாபாரிகள் புலம்பல் திண்டுக்கல் சந்தைக்கு வந்த சில கோழி வியாபாரிகளிடம் இது குறித்து விசாரித்த போது திண்டுக்கல் மாநக ராட்சியில் ஒரு கோழிக்கு ரூ.20 வரி வசூலிக்கப்படுகிறது. ஐந்தாண்டு களுக்கு முன்பு ரூ.5. வசூலிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சி ஒப்பந்த காரர்கள் கட்டணத்தை உயர்த்தி வசூ லிக்கிறார்கள். ஒட்டன்சத்திரம் வாரச் சந்தையில் கிராமப்புற விவசாயிகள் கொண்டு வரும் கோழிக்கு கோழியின் விலையில் பாதியை வரியாக வசூ லிக்கிறார்கள் என்று தெரிவித்தனர். ஒரு நாட்டுக் கோழி குஞ்சுக்;கு நுழை வுக் கட்டணம் ரூ.70 வசூலிக்கப்படு கிறது. கோழியை வாங்கி வந்தாலும் ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கோழிக்கு ரூ.140 வசூலிக்கப்படு கிறது. ஆனால் ரூ.300 வாங்கும் கோழிக்கு பாதிக்குப் பாதி வரி கட்ட வேண்டும். அதாவது ரூ.140 கொடுக்க வேண்டும். பத்து கோழிகள் கொண்டு சென்றால் ரூ.700 வரி கட்ட வேண்டும். இல்லை என்றால் இரண்டு கோழியை எடுத்துக்கொள்வார்கள் என்றனர்.