districts

img

நாகர்கோவில்-மும்பை ரயிலை தினசரி இயக்க வேண்டும் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை

திருநெல்வேலி, ஏப்.30- மும்பை தமிழின ரயில் பயணிகள் நல சங்க பொதுச் செயலாளர் டி.அப்பாதுரை, ஆலோசகர் கே.வி. அசோக்குமார் மும்பையில் மத்திய ரயில்வே தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் அனில் குமார் கட்கேவிடம் மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  மும்பை?நாகர்கோவில் ரயிலை தினசரி இயக்கவும், மதியம் 12.50-க்கு மும்பையில் இருந்து இயக்கப்படும் மும்பை?சென்னை ரயிலை விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக நெல்லை வரை நீட்டிக்கவும். கன்னியாகுமரி-மும்பை ரயிலுக்கு பதிலாக மும்பை எல்டிடி, திருவனந்தபுரம் நேத்ராவதி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.