districts

img

“விளை நிலத்தை அழித்து உணவுப் பூங்கா தேவையில்லை”

விருதுநகர், ஜன.23- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள முத்தனேரி மற்றும் அகத்தா குளம் பகுதியில் உள்ள விளை நிலங்  களை அழித்து உணவுப்பூங்கா அமைப்ப தைத் தமிழக அரசு கைவிடத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் வி.முருகன், துணைத் தலைவர் கே. சுப்பாராஜ், பெருமாள்ராஜ் மற்றும் ஊர்த் தலைவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி கள், “எங்களது விளை நிலங்கள், நாங்கள்  குடியிருக்கும் பகுதிகளையும் பயன்படாத தரிசு நிலங்கள் என வகை மாற்றம் செய்  துள்ளனர். இந்நிலங்களில் நெல், பயறு  வகைகள், பருத்தி உட்பட ஏராளமான பயிர்களைச் சாகுபடி செய்து வருகி றோம். விளை நிலங்களை அழித்து உணவுப் பூங்கா அமைத்தால் எங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்படும். எனவே, இந்தத்திட் டத்தைக் கை விட வேண்டும்” என்றனர்.