தேனி, ஜூன் 29- தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கம்பம், கூடலூர், போடி, தேனி ,பெரியகுளம், ஆண்டிபட்டி ,தேவதானப்பட்டி, உத்தமபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகள் மற் றும் மைதானங்களில் நடைபெற்ற தொழுகை களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் . தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற் சாகம் அடைந்தனர். பக்ரீத் பெருநாளில் ஏழை களுக்கு உதவி செய்வது வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் பல இடங்களில் ஏழைகளுக்கு உதவிகளை வழங்கினர். மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.