districts

மதுரை முக்கிய செய்திகள்

தேனி மாவட்ட திட்டமிடும் குழு தேர்தல்  ஊரக பகுதிகளுக்கு  5 பேர் போட்டியின்றி தேர்வு

தேனி, ஜூன் 15- தேனி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில்  ஊரக பகுதிக்கான உறுப்பினர் பதவிக்கு 5 பேரும் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  ஊரக பகுதிகளுக்கான உறுப்பினர் தேர்தலில் 5 இடங்க ளுக்கு திமுக சார்பில் மாவட்ட ஊராட்சி 6 வது உறுப்பினர்  வளர்மதி, 9 வது வார்டு உறுப்பினர் எம்.தமயந்தி, அதிமுக  சார்பில் 5 வது வார்டு உறுப்பினர் பாண்டியன், 10 வது  வார்டு உறுப்பினர் இளம்வழுதி, பாஜக சார்பில் மாவட்ட  ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டியன் ஆகிய 5  பேர் மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இதனால்  இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். நகர்ப்புற பகுதிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளது. நகர்ப்புற பகுதிக்கான உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட 57 வேட்புமனுக்களும் செல்லத்தக்க வேட்பு மனுக்களாக ஜூன் 12 அன்று அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற  பகுதிக்கான 57 வேட்பு மனுக்களில் திரும்பப்பெறப்பட்ட 21 வேட்பு மனுக்கள் போக 36 வேட்பாளர்களை இறுதி  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே வருகிற 23  ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலு வலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய பாரதி தெரிவித்துள்ளார்.

விருதுநகர், ஆர்.ஆர்.நகர் பகுதிகளில் நாளை மின்தடை

விருதுநகர், ஜூன் 15- விருதுநகர் துணைமின்நிலையத்தில் ஜூன் 17 இல்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே,  அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பழைய பேருந்து நிலைய பகதிகள், மேற்கு ரத வீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்கநகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி மற்றும் புறநகர் பகுதிகளான குல்லூர்சந்தை, பெரியவள்ளிக்குளம், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஒ.நகர், வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர், வட மலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திர ரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன் நகரில் உள்ள முத்தால் நகரின் ஒரு பகுதி, ஒரு பகுதி, காந்தி நகரின்  காந்தி நகரின் ஒரு பகுதி, சத்யசாமி நகர், பேராலி ரோடு  ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை மின்சாரம் நிறுத்தப்படும்.  இதேபோல் துலுக்கபட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துலுக்கப்பட்டி, ஆர்.ஆர் நகர் முக்கு ரோடு, வச்சகாரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமார லிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேல சின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம். வாய்  பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி மில்  குவார்ட்டர்ஸ் தென்பகுதி மற்றும் ஒண்டிப்புலிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோ கம் நிறுத்தி வைக்கப்படும் என மின்சார வாரியம் அறி வித்துள்ளது.

முதியோர் கொடுஞ்செயல்  எதிர்ப்பு தினம்

விருதுநகர், ஜூன் 15- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் முதி யோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அப்போது அனைவரும் உறுதி மொழி  எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, ஆட்சியர் கூறுகை யில், முதியோர்களை அரவணைப்போடு பராமரிக்க வேண்டும். மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கு தல் கூடாது. தகாத வார்த்தைகளை அவர்களிடம் உப யோகித்தல் கூடாது. பொது இடங்களான மருத்துவ மனை, பேருந்து, வங்கிகள் ஆகியவற்றில் முதியோர் களுக்கு முனனுரிமை அளிக்க வேண்டும் என தெரி வித்தார்.'

சாணார்பட்டி அருகே மின்மோட்டார்கள் திருட்டு

நத்தம், ஜூன் 15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி  ஒன்றியம் மடூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி யைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 38). விவசாயி.இவருக்கு வீட்டின் அருகிலேயே விவசாய தோட்டம் உள்ளது. இந்த நிலையில் நேற்று யுவராஜ் அவரது தோட்டத் திற்குச் சென்றார்.அப்போது அங்கிருந்த 3 மின் மோட்டார், மர அரவை மிஷின்,கடப்பாரை மற்றும் கேபிள் வயர்  ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.