மதுரை, ஆக.21- அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்திக் கூடுதல் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கக் கோரி வழக்கில் பள்ளிக் கல்வித்துறை- தேனி ஆட்சியர் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பொன்னையா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது. ஆங்கிலவழி மற்றும் தமிழ்வழியில் பயிலும் மாண வர்களுக்கு ஒரே வகுப்பறையில் வைத்துப் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதல் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதா னம் அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் கடந்த 2020- ஆம் ஆண்டுச் செயல்முறை ஆணை பிறப்பித்தும் அதைச் செயல்படுத்தாமல் பள்ளிக் கல்வித்துறை காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மாணவர்களின் படிப்புப் பாதிக்கப்பட்டுத் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தும் வகையில், பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தைப் பயன்படுத்திக் கூடுதல் வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்க அர சுக்கு உத்தரவிடவேண்டுமென” தெரி வித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்ரவர்த்தி அமர்வில் திங்களன்று விசா ரணைக்கு வந்தது. வழக்குக் குறித்துப் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தர விட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.