districts

மதுரை முக்கிய செய்திகள்

தோழர் எஸ்.முனியாண்டி காலமானார்

தேனி, ஜூலை 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு  அலுவலக  கிளை உறுப்பினரும் மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாவட்ட துணை தலைவருமான தோழர் எஸ். முனியாண்டி வெள்ளிக்கிழமை  மாலையில் .இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது மின்வாரிய ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் மாநில துணை தலைவர் கே.சந்திரசேகரன் மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி ,ஜி .சண்முகம் ஆகி யோர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கண்டமனூர்  அருகே மாதிரி பள்ளி தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்

தேனி, ஜூலை 15- கண்டமனூர் அருகே  அரசு பாலிடெக்னிக் கல்லூரி யில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு மாதிரிப்பள்ளி யை தேனி ஆட்சியர்  ஷஜீவனா தொடக்கி வைத்தார். மாணவர்கள் சேர்க்கைக்கான அறிமுக கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் முன் னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், இந்த கல்வி யாண்டில், மாதிரி பள்ளிகள் 10, 11 மற்றும் 12-ம் வகுப்  பிற்காக தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தேனி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பு  தொடங்கப்பட உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களின் தனித்  திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக தனித்தனி யாக பிரித்து அவர்களுக்கென சிறப்பு பயிற்சிகளுடன் கூடிய பாடம் கற்பிக்கப்படும். பாடங்களை மனப்பாட முறையில் கற்காமல் அறிவியல் பூர்வமாக நவீன தொழில்  நுட்பங்களை பயன்படுத்தி, சுலபமாகவும் மாணவர்கள் அறிந்து புரிந்து படிக்கும் வகையில் இங்கு பாடத் திட்டங்கள் நடத்தப்படும். பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையிலும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறும் அனைத்து தேர்விற்கும் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.  இந்த சிறப்பு  அரசு பள்ளிகளில் 11-ஆம் வகுப்பிற்கு 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இயற்பி யல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், உயிரி யல் என பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த  பாடங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு, விடுதி  உட்பட அனைத்து விதமான வசதிகளும் செய்து கொடுத்து கல்வி கற்பிக்கப்படும் என்றார்.

தீண்டாமைக்கெதிரான தீப்பந்தம் நூல் வெளியீட்டு விழா

திண்டு க்கல், ஜுலை 15- திண்டுக்கல்லில் தீண்டாகெதிரான தீப்பந்தம் 2வது தொகுதி நூல் வெளியீட்டு விழா தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் கே.டி.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் இலமு வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் டி.முத்துச்சாமி, கே.அருள்செல்வன்,  பேரா.சோ.மோகனா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலின் முதல் பிரதியை மாநில பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதல் பிரதி யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல்  மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் பெற்றுக் கொண்டு நூலின் மதிப்புரையாற்றினார். சிபிஎம் மாநி லச்செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, சங்கத்தின் மாநிலத்தலைவர் டி.செல்லக்கண்ணு, ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

பயிற்சி கட்டணம் இல்லை

மதுரை, ஜூலை 15-  மதுரை கோ.புதூரில் உள்ள அரசு  தொழிற்பயிற்சி நிலையத்தில் 23 தொழிற் பிரிவுகளில் 550 காலியிடங்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 20 வரை நடைபெறு கிறது. பயிற்சி கட்டணம் கிடையாது. 14 வயது நிறைவு பெற்ற 8-ஆம் வகுப்பு  / 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மாணவ / மாண வியர் மாற்றுச் சான்றிதழ் பத்தாம் வகுப்பு  / எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,  சாதி சான்றிதழ் ஆகிய அசல் சான்றி தழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல், மார்பளவு புகைப்படம் (ஐந்து எண்கள்) ஆகியவற்றுடன் அலுவலகத்திற்கு நேரில்  காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள்  வந்து வருகையினை பதிவு செய்து விதி களின்படி காலியாக உள்ள தொழிற்பிரிவு களில் அன்றைய தினமே ஓராண்டு தொழிற்  பிரிவிற்கு ரூ.185-மும் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195-மும் செலுத்தி பயிற்சியில் சேரலாம். விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.50- ஆகும். சலுகைகள் மாதந்தோறும் அனைத்து பயிற்சியா ளர்களுக்கும் ரூ.750- உதவித் தொகை யுடன் கூடுதலாக புதுமைப்பெண் திட்டத்  தின்கீழ் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை  அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் களுக்கு மாதந்தோறும் ரூ.1000-மும்  வழங்கப்படும், விலையில்லா மிதிவண்டி,  விலையில்லா இரண்டு செட் சீருடை &  தையற்கூலி, விலையில்லா ஒரு செட் காலணி, கட்டணமில்லா பேருந்து சலுகை,  உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி  வசதி உண்டு, விலையில்லா பாடப்புத்த கங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது. மேலும், தற்போது வெளியிடப்பட் டுள்ள அரசாணை எண்.34, நாள்.30.03.2022 -இன்படி, பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ஆம்  வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல 8-ஆம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற வர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கி லம்) மட்டும் எழுதி 10-ஆம் வகுப்பு சான்றி தழ் பெறலாம். சேர்க்கை குறித்த மேலும் விவரங்கள்  www.skilltraining.tn.gov.in என்ற  இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள லாம். அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலை யம் மதுரையினை நேரில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இந்த அரிய  வாய்ப்பை மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

அபிராமத்தில்  சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூலை 15-  இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்காத நிலையில் இருக்கும் சந்தை கடைகளை மக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி  வருவாய்  அதிகப்படுத்தும் வகையில் ஆடு கோழி விற்  பனை சந்தையாக விரிவாக்கிட வேண்டும். அபிராமம் முதுகுளத்தூருக்கு புறவழிச் சாலை அமைத்திட வேண்டும் அபிராமம் 13வது வார்டு சாலை வசதிக்கான டெண்டர் பணிகளை கால தாமதம் இன்றி உடனே துவக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கமுதி தாலுகா குழு சார்பாக அபி ராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கிளைச் செயலாளர் வீரய்யா தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஏ கண்ணதாசன், மாவட்ட குழு  உறுப்பினர் வி.முருகன், ஆர்.முத்துவிஜயன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரவிக்குமார், தாலுகா குழு உறுப்பி னர்கள் பொன்னுச்சாமி பி.கே.முனியசாமி மற்றும் கே. முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போலி டாக்டர் கைது

நத்தம், ஜுலை 15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலி டாக்டர்கள் அதி கம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.  இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்பணி கள் இணை இயக்குநர் பூமிநாதன் தலைமையில் கொசவ பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் மற்றும்  போலீசார் வேம்பார்பட்டியில் உள்ள மருத்துவமனையில்  சோதனை மேற்கொண்டனர். அப்போது கலாவதி என்ப வர் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம்  செய்தது விசாரணையில் தெரியவந்தது . இதைதொடர்ந்து  அவரை கைது செய்த சாணார்பட்டி போலீசார் அவர் வைத்திருந்த ஊசி,மாத்திரை, மருந்துகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.