சென்னை, மார்ச் 29 - சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவ மனையில், ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ என்ற செயல் திட்டத்தை சுகாதா ரம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செவ்வாயன்று (மார்ச் 29) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், முறையான சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டுச் சூழலில் 50 க்கும் அதிகமான தீவிர நோய் பாதிப்புகளுக்கு பாது காப்பாக சிகிச்சையளிப் பதில் ஹலொ டாக்டர் - 2001 2001 திட்டம் முக்கிய பங்காற்றும் என்று தாம் உறுதியாக நம்புவதாக கூறினார். சிம்ஸ் மருத்துவமனை யில் கிடைக்கக்கூடிய அதே அளவிலான உடல்நல பராமரிப்பு சேவையை, வயது முதிர்ந்த நோயாளி கள், குழந்தைகள் அவர்க ளது வீடுகளில் இருந்து கொண்டே பெறமுடியும் என்பது இத்திட்டத்தின் சிறப் பம்சம் என்று செய்தியாளர் களிடம் பேசிய எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து கூறினார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ் ணன், சிம்ஸ் மருத்துவ மனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.