districts

img

வாலிபர்கள் சைக்கிள் பயணம் விருதுநகர் வந்தடைந்தது

மதுரை, ஏப்.25- மதுரை மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங் கம் சார்பில் திங்களன்று தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் நியாயமற்ற செயல்பாடுகள் மீது நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி மதுரை ஆட்சியரிடம் மனு அளித் தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயி கள் கூறியதாவது: “ஒப்பந்தம் மற்றும் வளர்ப்புத் தொகை அடிப்படையில், விவ சாய நிலங்களில் அமைக்கப்பட்ட கொட்டகைகள் மூலம் விவசா யத்தின் உப தொழிலாக கறிக்  கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக  கறிக்கோழி வளர்ப்புக்குத் தேவையான தேங்காய் நார் மஞ்சி, கரிமூடை போன்ற இடு பொருட்களின் விலை  கடுமை யாக உயர்ந்துள்ளது .  ஒப்பந்த அடிப்படையில் வளர்த்துத் தரும் கறிக்கோழி களை. சந்தைப்படுத்தும் தனியார் வளர்ப்பு கோழி நிறுவனங்கள், முறைப்படுத்தப்படாத, குறைந்த பட்ச வளர்ப்புத் தொகை,  தர மற்ற தீவனங்கள் வழங்குவது போன்ற காரணங்களால்  நாங்கள் தொடர்ந்து துயரங்களைச் சந் தித்து  வருகிறோம். கறிக்கோழிகளை. சந்தைப்  படுத்தும் தனியார் வளர்ப்பு கோழி நிறுவனங்கள் நியாயமான விலை யை நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு வில் கூறியுள்ளனர்.  இதே கோரிக்கையை வலியு றுத்தி திண்டுக்கல்லில்  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தங்களது கோரி க்கையை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் வரை தங்  களது காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என தெரி வித்தனர்.  திண்டுக்கல் மாவட்டத் தலைவர் அந்தோனி, ஆரோக்கி யதாஸ், பொருளாளர் ஹரிஹரசு தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர்.