தேனி, ஆக.28- நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழையின்றி நீர்வரத்து குறைந்து, முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டம் 118.25 அடியாகக் குறைந்து விட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணை களின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. திங்க ளன்று காலை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. அணை யிலிருந்து 400 கன அடி நீர் தமிழகப் பகுதிக்குத் திறக்கப்படு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.01 அடியாகக் குறைந்துள்ளது. வருஷநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லா ததால் மூல வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இத னால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மதுரை மாநகர் குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப் பாறை அணையின் நீர்மட்டம் 67.05 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.