சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், தடியமங்கலம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்றத்தலைவர் நாகஜோதி தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். நம்ம ஊர் சூப்பர் விழிப்புணர்வு வாகனத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.ரா.சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோ.முனியாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.