districts

img

அங்கன்வாடி ஊழியர்களை அலுவலர்கள் மூலம் மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்

அங்கன்வாடி ஊழியர்களை அலுவலர்கள் மூலம் மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். பிற துறைகளின் பணிகளை அங்கன்வாடி ஊழியர்களை செய்திட வற்புறுத்தக் கூடாது என வலியுறுத்தி சிஐடியு-தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் விளக்க கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எம்.சாராள், எம்.திருமலை ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.