பாலக்காடு, பிப். 8- குத்தகை காலம் முடிந்த பிறகும் என்எஸ்எஸ் வசம் உள்ள 66.5 ஏக்கர் நிலத்தை சாத்தான்குளங்கரா கோயிலுக்கு திருப்பித்தர வேண்டும் என மலபார் தேவசம் போர்டு தலைவர் எம்.ஆர்.முரளி வலியுறுத்தினார். இதுகுறித்து எம்.ஆர்.முரளி செய்தி யாளர்களிடம் மேலும் கூறியதாவது: 1960 இல் என்எஸ்எஸ் கல்லூரி தொடங் கப்பட்டபோது, 50 ஏக்கர் கோயில் நிலம் என்எஸ்எஸ் நிறுவனத்துக்கு 36 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆண்டுக்கு 300 ரூபாய் வாடகை. 1992 வரை குத்தகை தொகை வழங்கப்பட்டது. பிறகு அதுவும் நின்றுவிட்டது. குத்தகை காலம் முடிந்து நிலத்தை திரும்ப பெற அணுகியபோதுதான், முறை கேடாக நிலம் கையகப்படுத்தப்பட்டது தெரிய வந்தது. மேலும் கோயிலை ஒட்டிய 16.5 ஏக்கர் நிலத்துக்கு பட்டா பெறப் பட்டது. அதை ரத்து செய்யக் கோரி நில தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. ஆனால் தேவஸ்வம் தரப்பை கேட்காமல் என்.எஸ்.எஸ்.க்கு சாதகமாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீட்டு ஆணையத்தை அணுகி குத்தகை முடக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ளதால், நிலத்தில் மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. புலிகளின் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், மரங்களை வெட்டக்கூடாது என்கிற பஞ்சாயத்து உத்த ரவை மீறி, பெரிய அளவில் கொள்ளை நடக்கிறது. இது உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். கோயில் நிலத்தை எக்காரணம் கொண்டும் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம். சாத்தன்குளங்கரா பகவதி கோயில் வருமானம் குறைந்த கோயி லாகும். பெரிய தொகையை செலவு செய்து கோயிலால் வழக்கு போட முடியாது. இந்த பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி நீதி மன்ற விசாரணைக்கு இழுப்பது கண்டிக் கத்தக்கது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மரங்களை வெட்டுவது நியாயமில்லை. என்.எஸ்.எஸ்-ஸிடம் இருந்து கண்ணி யமான அணுகுமுறையை எதிர்பார்க்கி றேன் என்றார் எம்.ஆர்.முரளி. செய்தியாளர் சந்திப்பில் தேவசம் போர்டு உறுப்பினர் ஒட்டூர் உன்னி கிருஷ்ணன், சாத்தான்குளங்கரை தேவசம் போர்டு அறங்காவலர் நந்தகுமார், உதவி ஆணையர்கள் சதீஷ்குமார், வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.