districts

img

பிளஸ்-2 தேர்வு அதிக மதிப்பெண்கள் பெற்ற தேவாங்கர், விக்டரி பள்ளி மாணவ,மாணவியர்கள்

சின்னாளப்பட்டி,மே.10- திண்டுக்கல் மாவட்டம்  சின்னாளபட்டியில் உள்ள  தேவாங்கர் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2  தேர்வில் மாணவி ராஜேஸ்வரி 569 மதிப்பெண்கள் பெற்று  முதல் இடத்தையும் மாணவி காயத்ரி 558 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் மாணவி லாவண்யா 549 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவி களை பள்ளியின் செயலர் ராகவன் ,தலைவர் பெத் தண்ணசாமி, தலைமை ஆசிரியர் ஞானசேகரன் ஆகி யோர் வாழ்த்தினர்.   விக்டரி மெட்ரிக் பள்ளியில் மாணவி கே.ஹரிணி 514 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் மாணவர்  எம்.கிஷோர்  456 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்  மாணவி கே.மேக பிரியா 454 மதிப் பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் ரவீந்திரன், முதல்வர் மலர்விழி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.