districts

img

ஓய்வு பெற்றவர்களின் ஓய்வற்ற களப்பணி

தூத்துக்குடியில் உள்ள மக்களுக்கு உதவி செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களில் முன்நிற்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களான என்.கலியமூர்த்தி, வே.ராவேந்திரன் ஆகிய இருவரும் சிதம்பரத்தில் உள்ள தங்கள் நண்பர்கள் மூலம் 120 குடும்பங்களுக்கு தேவையான பெட்ஷீட், துண்டு, கைலி, 5 கிலோ அரிசி, பருப்பு, ரவை, கோதுமைமாவு, சமையல் எண்ணெய், குளியல் சோப்பு, துணி சோப்பு, உப்பு என பொருட்களை வாங்கி ஒரு குடும்பத்திற்கு இரண்டு பேக் என தனித்தனியாக பேக் செய்து அவைகளை 29 மூட்டைகளாக மாற்றி அனுப்பிட ஏற்பாடு செய்தனர்.  மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்டு அங்கு அதை தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.   ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் மாவட்டத்திற்கு 120 குடும்பங்களுக்கு உதவி என்பது மிக சிறிய எண்ணிக்கைதான். ஆனால் இது எண்களால் புரிந்துகொள்ளும் உதவி அல்ல.