districts

img

ஏர்வாடியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஏர்வாடி ஊராட்சி  அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் நம்புராஜன் தலைமை வகித்தார். தலைவர்கள் எம்.முத்துராமு, மயில்வாகணன், அம்ஜத்தான், நம்பு ராஜன், கே.பச்சைமால், முருகேசன், ராம சாமி உட்பட 50-க்கும் மேற்பட்ட பெண் கள் பங்கேற்றனர்.  பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் சிபிஎம் தலைவர்களுடன் நடத்திய  பேச்சுவார்த்தையில், ஏர்வாடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும், ஏர்வாடியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தர  வேண்டும், சாலைகளை சீரமைத்து தர வேண்டும், மருத்துவமனையில் கூடுதல்  மருத்துவர்கள், செவிலியர்களை நிய மித்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஏர்வாடி பகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இதனி டையே லாரிகள் மூலம் குடிநீர் போர்க்கால  அடிப்படையில் உடனடியாக வழங்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் சிபிஎம் தலைவர்கள் எம்.முத்துராமு, மயில்வாகனன், அம்ஜத்தான், நம்புராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.