districts

img

உப்புத்தன்மை குடிநீரால் மக்கள் பாதிப்பு சிபிஎம் தலையீடு-நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி

சின்னாளப்பட்டி, ஏப்.7-  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியம் குட்டத் துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலம்ராஜக்காப்பட்டி, பழைய முத்தனம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக் கான மக்கள் வசித்து வருகின்ற னர்  இந்த கிராமங்களுக்கு குடி தண்ணீர் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் வருகிறது. அதுவும் உப்பு சேர்ந்து வருவதால், 16  வயதுக்குட்பட்ட இரண்டு பேர்  கிட்னி பாதிக்கப்பட்டு, மாற்று  அறுவை சிகிச்சை செய்யும் நிலை மைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து கிராம பொது மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், விஜய குமார், பாலு ஆகியோரிடம் முறையிட்டனர். தலையிட்டு உட னடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  இதுதொடர்பாக கே.பால பாரதி செய்தியாளர்களிடம் கூறு கையில், பொதுமக்கள் கூறிய தின் அடிப்படையில் சிபிஎம் சார் பில் தலையிட்டு உடனடியாக பொறியாளர் பிச்சாண்டிக்கு தக வல் கொடுக்கப்பட்டது. அவரும் குடிதண்ணீரை பரிசோதனைக்கு அனுப்புவதாகக் கூறினார்  மேலும் இதுகுறித்து கூட்டுற வுத் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமியின் அலுவலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். இதே நிலை தொடர்ந்து நீடித்ததால் சிபிஎம் சார்பில் போராட்டம் நடை பெறும் என்று கூறினார்.