தேனி, ஜூலை 17- வீல் சேர் கேட்டு தேனி ஆட்சி யர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியின் மனு வை திருத்தி எச்ஐவி க்கு சிகிச்சை அளிக்க மாற்றுத்திறனாளி அலு வலர்கள் செய்த செயலால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி யுள்ளது. தேனி அருகே குன்னூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வர் மேரி. இவர் தன்னுடைய கை, கால்கள் செயலிழந்துவரும் மக னுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வழங்கக் கோரி தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந் தார். அப்போது அவருடைய மனு வை வாங்கிய மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக ஊழி யர்கள், மனுவில் குறிப்பிட்டிருந்த கோரிக்கையை அடித்துவிட்டு , மாற்றி எழுதி எச்ஐவி சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவ மருத்துவ மனைக்கு பரிந்துரைத்தனர். இதுகுறித்து மேரி கூறுகை யில், `என்னுடைய கணவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வி பாதிப்பால் இறந்து விட்டார். எனக்கு இரண்டு மகன்கள். இதில் 18 வய தான மூத்த மகனுக்கும் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ். சிறுவயதிலேயே பாதிப்பு கண்டறியப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே ப்ளஸ்-2 படித்துக்கொண்டிருந்த வருக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்து, தலை நிற்காமல் போனது. மருத்துவர்கள் தொடர்ச்சி யாக மருந்து எடுத்துக்கொள்ளாதது தான் பிரச்னைக்குக் காரணம் எனக் கூறிவிட்டனர். இதனால் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியதாகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய மகனைக் காப்பாற்ற மருத்துவ மனைக்கும் வீட்டுக்குமாக அலைந்துகொண்டிருக்கிறேன். நடக்க முடியாத மகனை அழைத்துச் சென்று வருவதில் சிரமம் இருக்கி றது, எனவே மாற்றுத்திறனாளி களுக்கான வீல் சேர் வழங்க ஏற்பாடு செய்யுமாறு மனு எழுதிக்கொண்டு, மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்தேன். அப்போது மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக ஊழியரான கார்த்திக் என்பவர், எனது மனுவை வாங்கிப் பார்த்துவிட்டு அருகே இருந்த பெண் ஒருவரிடம் கொடுத்து, `ஹெச்.ஐ.வி கேஸ்’ என மாற்றிக் கொடுக்கும்படி கூறினார். அவரும் என்னுடைய மனுவின் கோரிக்கை யை அடித்துவிட்டு, `ஹெச்.ஐ.வி சிகிச்சை எடுக்க வேண்டி மனு’ என மாற்றி எழுதினார். பின்னர் செய்தியாளர்கள், ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்த னர். அப்போது மகனுக்கு வீல் சேர் வேண்டும் என ஆட்சியரடம் வலி யுறுத்தினேன். ஆட்சியர் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.