அருப்புக்கோட்டை, ஜன.3- கொரோனாவை தடுக்கும் பொருட்டு 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி, சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவி ராஜ், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, துணை இயக்குநர் சண்முகசுந்தரம், வட்டாட்சியர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.