districts

திமுக -ஓபிஎஸ் மகன் பரஸ்பரம் ஆட்சியரிடம் புகார்

தேனி, டிச.7- பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க.தமிழ்செல்வன் ,ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியரி டம் புகார்  அளித்தனர் . தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் மலை மேல் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில்.  இந்த கோவில்  பல ஆண்டுகளாக பராம ரிப்பின்றி இருந்து வந்தது.இதன் பின்னர் ஓபிஎஸ் 2002 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரான  பின்பு அமைச்சர் மற்றும் முதலமைச்சரான நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தாரின் முயற்சி யால் இவர்களின் சொந்த செலவில் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்  ளப்பட்டு பக்தர்கள் சென்று வரும் வகை யில் கோவிலுக்கு சாலைகள் அமைக்கப் பட்டு 2012 ஆம் ஆண்டு கோவில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. திமுக எதிர்ப்பு  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மட்டுமே கார்த்திகை தீபம்  ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி வைத்து வந்து கொண்டி ருந்தனர்.இந்த சூழலில் ஆட்சி மாற்றத்  திற்குப் பின்பு இந்த ஆண்டு இந்துசமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என திமுகவைச் சேர்ந்த தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகி யோர் இந்து சமய அறநிலைத்துறை அதி காரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில் டிசம்பர் 7 அன்று  கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்காக வழக்கம்போல் ஓபிஎஸ் குடும்பத்தினர் அந்த கோவிலுக்கு செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த னர்.  கோவில் செயல் அலுவலர் ராம திலகம் என்ற பெண் செயல் அலுவலரை கார்த்திகை தீபம் ஏற்ற திமுகவினர் மேடை ஏற்றி நிறுத்தினர். அதே சமயம் ஓபிஎஸ்சின்  இளைய மகன் ஒ.பி.ஜெயபிரதீப் மற்றும் அவரது  குடும்பத்தினர் என பலர் இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். அப்போது ஓபி எஸ்சின்  இளைய மகன் ஜெயப்பிரதீப்புக்கு பரிவட்டம் கட்டப்பட்ட நிலையில் இதற்கு  தங்கத்தமிழ்செல்வன் மற்றும் பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது தங்கதமிழ்செல்வன்,  ஜெய பிரதீப் இடையே மற்றும் அதிமுகவினர்,  திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக தீபத்துடனும்,  செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்ற தீ பந்தத்துடனும் இருவருக்கிடையே போட்டி ஏற்பட்டது. அப்பொழுது கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்டபோது பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் பூசாரியின் வேட்டியை பிடித்து பின்னே இழுக்க என தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக ஒ.பி.ஜெயபிரதீப் கையில் வைத்திருந்த விளக்கை கோவில் பூசாரி பெற்றுக் கொண்டு கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார்.இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் கோவி லுக்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட கொப்பறையில் ஒரு குடம் நெய் ஊற்றி கார்த்திகை தீபத்தை வழிபட்டு பின்பு கைலாசநாதர் சாமி தரிசனம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்  மற்றும் திமுக வினர் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரனை நேரில் சந்தித்து புகார்  அளித்தனர் .புதன்கிழமை காலை தேனி ஆட்சியரை நேரில் சந்தித்து ஜெயபிரதீப் புகார் அளித்தார் .