மதுரை, ஜன.9- மதுரை மாநகராட்சி துணை மேய ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினருமான தி.நாகராஜனின் வீடு புகுந்து சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். மதுரை ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பகுதியைச் சேர்ந்த சமூக விரோ திகள் சிலர், அப்பகுதியில் வசிக்கும் மதுரை மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜனை குறிவைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் செவ்வா யன்று இரவு அரிவாள், கத்தி உள் ளிட்ட கொடிய ஆயுதங்களுடன் அவ ரது இல்லத்தில் தாக்குதல் நடத்தினர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த அவ ரது மனைவி செல்வராணி ஆயுதங்க ளுடன் வந்தவர்களைப் பார்த்தவுடன் கதவை அடைத்துள்ளார். கத வினை அரிவாளால் வெட்டி, சமூக விரோதிகள் உடைத்துள்ளார்கள். மேலும் வெளியில் இருந்த வாக னத்தையும் அடித்து உடைத்துள்ளார் கள். கதவை திறக்க முடியாததால் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் உள்ள அவருடைய அலுவலகத் திற்கு சென்று அலுவலகத்தில் உள்ள கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்துள்ளார்கள்.
இது குறித்து துணை மேயர் தி. நாகராஜன் கூறுகையில், “தாக்குதல் நடத்தியவர்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். யாருடைய தூண்டுதலின் பேரில் இவர்கள் என்னை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள் என்று தெரிய வில்லை. தற்போது காவல்துறை இரு வரையும் பிடித்துள்ளது. உடனடியாக காவல்துறை உரிய விசாரணை மேற் கொண்டு அவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன் கூறுகை யில், “இது மிகப்பெரும் கொடூர கொலை வெறிதாக்குதல். துணை மேயர் நாகராஜனின் வீடு மற்றும் அலுவலகத்தை சமூக விரோதிகள் கொடிய ஆயுதங்களுடன் தாக்கி யுள்ளார்கள். தற்செயலாக துணை மேயர் நாகராஜன் உயிர் தப்பியுள் ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள் ளார்கள். அவர்களை காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, யாருடைய தூண்டுதலின் பெயரில் கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள் என்று அறிந்து அவர்களையும் கைது செய்ய வேண்டும். மேலும் துணை மேயர் நாகராஜனுக்கு பாது காப்பு அளிக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். முற்றுகை கொலைவெறி தாக்குதலுக்கு தூண்டிய நபர்களை கைது செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆவேசப் போராட்டத்திலும் ஈடு பட்டனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்ட தலைவர்கள், தாக்குத லுக்கு காரணமான நபர்களை கண்ட றிந்து கைது செய்ய வலியுறுத்தி முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.