மதுரை, மே 23- மதுரை மாநகரில் தெருக் களில் ஓடும் கழிவு நீர் பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக கட்சி யின் மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன் திங்க ளன்று விடுத்துள்ள அறிக்கை:- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதா ளச் சாக்கடை கழிவுநீர் சாலை களிலும், குடியிருப்பு தெருக் களிலும் வெளியேறி வருகி றது. சாலையைக் கடந்து செல்லும் மக்கள், மாணவ - மாணவிகளும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவரு கின்றனர். மழை பெய்தால் மழைநீரில் சாக்கடை நீர் கலந்து நோய் பரவும் அபா யம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கழிவு நீர் வெளியேறும் இடங்கள்
வார்டு 88-அனுப்பானடி, வார்டு 45 - கீழ்மதுரை காலனி, வார்டு 46 - இந்திரா நகர், வார்டு 86 - கீரைத்துரை, வில்லாபுரம். வார்டு 75-முத்துப்பட்டி, டி.வி.எஸ்.நகர், வார்டு 77-சுப்பிரமணியபுரம், வார்டு 78-கோவலன் நகர், மீனாட்சி தியேட்டர் பள்ளம், எப்.எப்.ரோடு. வார்டு 79-புலிப்பாண்டி யன் தெரு, வார்டு 80-நேதாஜி தெரு, வார்டு 81- பாரதியார் ரோடு, சங்கரலிங்கனார் தெரு, வார்டு 82-சோலை யழகுபுரம், வார்டு 83-எம்.கே.புரம். வார்டு 63-நாகுநகர், பாத்திமா நகர், வார்டு 64- பெத்தானியாபுரம், மேட்டுத் தெரு, வார்டு 72-பைகாரா, முத்துராமலிங்கபுரம் மெயின் வீதி. வார்டு 23-செல்லூர் 60 அடி ரோடு, வார்டு 27- அகிம்சா புரம், வார்டு 22-தத்தனேரி அனுமார் கோவில். வார்டு 56-செக்கடி தெரு, முரட்டன்பத்ரி, மில் காலனி, வார்டு 57- சண் முகம்பிள்ளை தோப்பு இரண்டாவது தெரு, வார்டு 58- சோணையார் கோவில் தோப்பு, மோதிலால் இரண் டாவது தெரு, மேலப்பொன் னகரம் ஆறாவது குறுக்கு தெரு, வார்டு 59-அம்பேத்கர் நகர் (எல்லீஸ்நகர்). வார்டு 50-சிம்மக்கல், கோவிந்தன் செட்டி தெரு, ஆதிமூலம் பிள்ளை அக்ர ஹாரம், வார்டு 54-காஜிமார் தெரு, ராஜாமில் மெயின் ரோடு.
வார்டு 27-சுயராஜ்ஜிய புரம் மேற்கு, கிழக்கு மெயின் ரோடு, இந்திரா நகர், பகத்சிங் நகர், வார்டு 24-செல்லூர் 50 அடி ரோடு, பட்டுக்கோட்டை வீதி, அண்ணா தெரு, புதூர் ராமவர்மா நகர், லூர்து நகர், சம்பக்குளம். மதுரை மாநகராட்சி நிர்வாகம் மண்டலம் வாரி யாக பாதாளச் சாக்கடை கழிவுநீர் வெளியேறும் இடங் களை சரி செய்ய வேண்டும், அனைத்து நேரங்களிலும் கழிவு நீரேற்றும் நிலையங் கள் செயல்படவேண்டும், தேவையான பகுதிகளுக்கு புதிய கழிவு நீரேற்றும் நிலை யங்கள் அமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடை மேனு வல், பைப்லைன் சேதம டைந்த இடங்களில் மாற்ற வேண்டும், தேவையான இடங்களில் புதிய பைன் லைன், மேனுவல் தொட்டி அமைக்கவேண்டும். அதே நேரத்தில் மாநக ராட்சியில் பணியாளர்கள் குறைப்பதை கைவிட வேண்டும், மலக் குழிக்குள் மனிதர்கள் இறங்கி வேலை செய்வதை தடுத்து மரணங்க ளில் இருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன இயந்தி ரங்களை மாநகராட்சி நிர்வா கம் பயன்படுத்த வேண்டும்.