விருதுநகர், டிச.22- விருதுநகர் மாவட்டம், திருச் சுழி ஒன்றியம் பரளச்சி அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் டாஸ் மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பரளச்சி அருகே உள்ளது வாகைக்குளம் கிராமம். இங்கு அரசு மதுபானக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுதது, பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த மாதம் அருப்புக் கோட்டை வட்டாட்சியர் அலுவல கத்தில் ரேசன் கார்டுகளை ஒப்ப டைத்து குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், வாகைக்குளம் கிரா மத்தில் மதுபானக் கடை திறக்கப் படாது என உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து, விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தில் வாகைக்குளம் கிராமத்தில் அமைய உள்ள புதிய மதுபானக் கடையானது, வேறு பகு திக்கு மாற்றம் செய்யப்படும் என வும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், புதனன்று காலை, காவல்துறையினரின் பாது காப்புடன் வாகைக்குளம் கிரா மத்தில் திடீரென மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதை அறிந்த பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்திடக் கோரி மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும், வியாழனன்று காலை, விருதுநகரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்று கையிடும் போராட்டம் நடைபெற் றது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் வட்ட செயலாளர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக்குமார், வி.முரு கன், எம்.சுந்தரபாண்டியன், எஸ். லட்சுமி, எல்.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.முத்துவேலு, மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிர மணியன், திருச்சுழி ஒன்றியகுழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், குமரேசன் மற்றும் ஞானதாஸ் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிபிஎம் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முடிவில், வேறுபகுதிக்கு டாஸ்மாக் கடை யை மாற்றம் செய்வது எனவும், அது வரை வாகைக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்கப்படாது எனவும் உறுதியளித்தார். எனவே, தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.