நாகர்கோவில், நவ.12- நவம்பர் 7-ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டுவரும் கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத் தொழிலா ளர்களை அழைத்துப் பேசி கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டுமென தமிழக முதல்வரை சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் காலவதியான நிலையில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். முந்தைய அரசு இதில் அக்கறையற்றி ருந்ததால் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்கள் நடத்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் முந்தைய அரசு மீது அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் இன்றைய புதிய அரசு அமைய பாடுபட்டார்கள். புதிய அரசு தங்களின் பிரச்சனைக ளுக்குத் தீர்வு காணும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால் அரசு ரப்பர் கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்ற முன் வராததால் மீண்டும் அரசிடமும் தொழி லாளர் துறையிடமும் முறையிட்டும் தீர்வு ஏற்படவில்லை. எனவே, மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டா யத்துக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தொடர் தலையீட்டின் பேரில் 31-12-2021 அன்று அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இறுதி முடிவு எட்டப்பட்டது.
ஒப்பந்தம் ஏற்படுத்த நிர்வாகம் கேட்ட கால அவகாசமும் வழங்கப் பட்டது. இருப்பினும் நிர்வாகம் ஒப்பந்தம் போட தொடர்ந்து மறுத்து வந்த சூழலில் 16-08-2022 அன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகம் சென்னையில் தொழிலாளர்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் 31-12-2021 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில், பேசி முடிக்கப்பட்டபடி ஒப்பந்தம் ஏற்படுத்தலாம் என நிர்வா கம் ஒத்துக்கொண்டது. மூன்று மாதங்கள் கடந்த பின்பும் நிர்வாகம் ஒப்பந்தம் ஏற்படுத்த முன்வரவில்லை. மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் இறுதிபடுத்தப்பட்ட முடிவுகளை ஒப்பந்தமாக்க மறுத்து வரும் நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும், 12(3) ஒப்பந்தத்தை உடனே ஏற்படுத்தி 1-12-2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகை யுடன் உடனே வழங்கவும் வலியுறுத்தி தொழிலாளார்கள் 7-11-2021 முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ரப்பர் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத எதேச்சதிகார நடவடிக்கையால் தமிழக அரசுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் உடனடி யாகத் தலையிட்டு ஏழை தொழிலா ளர்களின் நலன் காக்க 12(3) ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 1-12-2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென கடிதத்தில் கேட்டுக்கொண்டுள் ளார்.