ரயில்கள் பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் முதன்மையான பாதை மெயின் லைன் என்று அழைக்கப்படும். அதேநேரம், அதிகப்படியான ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக ரயில் நிலை யங்களில் அமைக்கப்படும் கூடுதல் பாதைதான் லூப் லைன் எனக் குறிப்பிடப்படுகிறது. மெயின் லைனில் இருந்து தண்டவாளப் பாதை விலகி தனி வழியில் பயணித்து சிறிது தூரத்திற்குப் பின் மீண்டும் மெயின் லைனில் இணைந்துவிடும். 750 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் இந்த லூப் லைன்களில் முழு ரயிலையும் நிறுத்த முடியும். எனினும், தற்போது ரயில்வே அமைச்சகம், 1,500 மீட்டர் நீளத்திற்கு லூப் லைன்களை அமைக்க திட்ட மிட்டு வருகிறது.