தேனி, செப்.11- தமிழக - கேரள எல்லை யில் உள்ள குமுளியில் பேருந்து நிலையம் அமைக்க வேண் டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ் நாடு அரசு ரூ.5.50 கோடி நிதியை ஒதுக்கி பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திங்களன்று நடைபெற்றது. தமிழக-கேரளா எல்லை யில் உள்ள தமிழக பகுதியில் பேருந்து நிலையம் இல்லா மல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் அமைக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத் திருந்தனர். இதற்காக அங்கு செய் யப்பட்ட அரசு போக்கு வரத்து பணிமனை லோயர் கேம்பிற்கு மாற்றப்பட்டது. அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்க. தமிழ்செல்வன் குமுளி பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்ற நோக்கில் போக்குவரத்து பணிமனை அமைக்க தொகுதி மேம் பாட்டு நிதியை ஒதுக்கினார். ஆண்டுகள் பல கடந்தும் குமுளியில் பேருந்து நிலை யம் அமைக்கவில்லை. இந்த நிலையில் திங்க ளன்று குமுளியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்வில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ. மகாராஜன், மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம், திண் டுக்கல் மண்டல பொது மேலா ளர் டேனியல் சாலமன், கூட்டாண்மை பொது மேலா ளர் சமுத்திரம், கோட்ட மேலாளர்கள் திண்டுக்கல் ரமேஷ், தேனி ரவிக்குமார், திமுக நகரச் செயலாளர் சி. லோகந்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய பேருந்து நிலை யத்தில் பேருந்துகள் நிற்கும் இடம், 18 கடைகள், உண வகம், தங்கும்விடுதி கட்ட வும் திட்டமிடப்பட்டுள்ளது.