districts

img

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டம்

விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விருதுநகர் வீரசெல்லையாபுரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. எஸ்.முருகேசன், எஸ்.கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்துவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முருகன், வடக்கு ஒன்றியத்தலைவர் கே.பெருமாள்ராஜ், ஒன்றியச்செயலாளர் எஸ்.ரெங்கநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.