districts

அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரம்

தேனி, டிச.25- பெரியகுளம் வட்டத்தில் அரசுக்கு சொந்தமான 156 ஏக்கர் நிலத்தை முறை கேடாக அதிமுக பிரமுகர், அவரது உற வினர்கள், அதிகாரிகளின் உறவினர் பெயரில் வருவாய்த்துறை அதிகாரி களால் பட்டா வழங்கிய விவகாரத் தில் பெரியகுளம் சார் ஆட்சியர் புகாரின் பேரில் 80 நாட்களுக்கு பிறகு தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியகுளம் வட்டாரத்தில் அரசு நிலங்களை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான அதிமுக ஒன்றியச் செயலாளர் அன்னப் பிரகாஷ், அவரது உறவினர்கள் அதி காரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் சார் ஆட்சியர்  ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அதிமுக ஒன்றிய செயலா ளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் சிலர் அபகரித்ததாக தெரியவந்தது. இந்த நிலத்தின் அரசு மதிப்பு ரூ.1 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் என கணக்கிடப்பட்டது. அதுபோல், தாமரைக்குளத்தில் ரூ.60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 60 ஏக்கர் அரசு நிலம், கெங்குவார்பட்டி யில் ரூ.8 கோடியே 62 லட்சம் மதிப்பில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும் அதிகாரி கள் துணையுடன் சிலர் அபகரித்ததும் தெரியவந்தது. இந்த 3 இடங்களிலும் சுமார் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அப கரிக்கப்பட்டது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் கனிம வளங்கள் கொள்ளை யடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

சார் ஆட்சியர் புகார்

இதையடுத்து இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய் யப்பட்டன. அந்த நிலங்கள் மீட்கப் பட்டு அரசு நிலங்களாக மாற்றப் பட்டன. இந்த அரசு நிலங்களை ‘அ’ பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து, கணினி பட்டா வழங்கப்பட்ட தும், அதன் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், தனித்தனியாக 3 புகார்களை பெரிய குளம் சார் ஆட்சியர் ரிஷப் கொடுத் தார். வருவாய்த்துறையினர் புகாரில் சம்பந்தப்பட்டுள்ளதால் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடைபெறும் என  தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அனு மதி வழங்குவதில் கால தாமதம் ஏற் பட்டது. இந்நிலையில் புகாரில் தொடர்பு டைய திருச்சி துணை ஆட்சியர் ஜெய பிரித்தா, பழனி கோட்டாட்சியர் ஆனந்தி ஆகியோர் தங்களை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் கடந்த வாரம்  தென்கரை காவல் நிலையத்தில், தங்க ளுக்கு தெரியாமல் கடவு சொல்லை பயன்படுத்தி பட்டா மாறுதல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் அரசு நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கிய நபர்கள் மீது நட வடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வா கத்தை கண்டித்து நவம்பர் 29 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்குப் பதிவு 

இந்நிலையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பா ளர் சுந்தர்ராஜ் 80 நாட்களுக்கு பின் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி னார். விசாரணையை தொடர்ந்து இந்த மோசடி நடந்த கால கட்டத்தில் பெரிய குளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணி யாற்றிய ஜெயப்பிரித்தா, ஆனந்தி,  தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சை மணி, சக்திவேல், வடவீரநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழ கர், மண்டல துணை தாசில்தாரின் உத வியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னப்பிரகாஷ், முத்து வேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உள்பட பலர் மீது மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில், ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வருகிறார். ஜெயப்பிரித்தா திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் துணை ஆட்சி யராக பணியாற்றி வருகிறார். தாசில் தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ண குமார், துணை தாசில்தார்கள் மோகன் ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவை யர்கள் பிச்சைமணி, சக்திவேல் ஆகி யோர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை வளை யத்தில் உள்ளனர்.

உயர் அதிகாரிகள் சிக்குவார்களா?

நில மோசடி புகாரில் அரசு நிலங் களை கண்காணிக்க தவறிய அப்போ தைய மாவட்ட ஆட்சியர்கள் ,மாவட்ட வருவாய் அலுவலர்கள், கனிம வளத் துறை அதிகாரிகள் இந்த விசாரணை யில் இடம்பெறவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.