districts

img

கனமழையால் திண்டுக்கல்லில் துப்புரவுத் தொழிலாளர்களின் வீடுகள் இடிந்தன

கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்

திண்டுக்கல், நவ.10- திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நெட்டுத்தெருவில் கன மழை காரணமாக துப்புரவுத் தொழி லாளர்களின் 3 வீடுகள் இடிந்தன.  திண்டுக்கல் மாநகராட்சி 28 வது வார்டு பகுதியைச் சேர்ந்தது நெட்டு தெரு, முனிசிபல் காலனி. இப்பகுதியில் மாநகராட்சியில் துப்புரவு பணி செய்யும் பணியா ளர்கள் 3 ஆயிரம் பேர் வசித்து  வருகின்றனர். இதில் 70 ஆண்டு களுக்கு முன்பு நகராட்சி சார்பாக குடியிருப்பு பகுதி கட்டப்பட்டுள் ளது. இதில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருந்து வரு கின்றனர்.  மாநகராட்சி துப்புரவுத் தொழி லாளர்கள் குடியிருந்து வரும் வீடு கள் பராமரிப்பின்றி உள்ளன. இத னால் கனமழை காரணமாக சுப்பி  என்ற பெண் குடியிருந்து மாநக ராட்சி குடியிருப்பு வீடு இடிந்து அரு கில் சொந்தமாக வீடு கட்டி குடி யிருக்கும் காளியப்பன் லட்சுமி தம்  பதியினர்,  லட்சுமணன் தேவி தம்பதி யினர் ஆகிய இருவரின் வீடுகள் மேல் விழுந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. செவ்வாயன்று மாலை நடைபெற்ற இந்த சம்ப வத்தையடுத்து மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வில்லை.  இது குறித்து பாதிக்கப்பட்ட லட்சுமி,  தேவி,  முரளிதரன் ஆகி யோர் கூறுகையில்,  திண்டுக்கல்  நகராட்சி துப்புரவு பணியா ளர்களுக்காக 70 ஆண்டுகளுக்கு முன்னர் குடியிருப்பு வீடுகள் கட்டி யிருந்தனர். குடியிருப்பு கட்டும்  பொழுது அருகிலேயே பணியில்  இருந்தவர்கள் சொந்தமாக வீடுகள் கட்டி குடியிருந்து வந்துள்ளோம். கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு  இதே போல் குடியிருப்பு பகுதி கன மழையினால் சேதம் ஏற்பட்டது.

அப் போது மாநகராட்சி மேயர் மற்றும்  ஆணையர் நேரில் வந்து பார்வை யிட்டு வீடுகளை பராமரித்து செய்தி  தருவதாக உறுதியளித்தனர்.  ஆனால் எந்த பராமரிப்பு பணியும் நடைபெறாத காரணத்தினால் குடி யிருப்பு சுவர்  கன மழையில் இடிந்து  எங்கள் வீடுகளில் மீது விழுந்துள் ளது.  கனமழை பெய்த பொழுது  காளியப்பன் மகன் கல்லூரி மாண வன் முரளிதரன், கல்லூரி முடித்து  வீட்டுக்கு வந்து உணவு சாப்பிட்டுக்  கொண்டிருக்கும் பொழுது சுவர் இடியும் சத்தம் கேட்டு வெளியே ஓடிவந்துள்ளார் மேலும் அருகில் இருந்த தேவி மற்றும் அவரது கர்ப்பிணி மகளையும் வெளியே கொண்டுவந்தனர். இதனால் உயிர்  சேதம் தப்பியது. மேலும் குடி யிருப்பு பகுதியில் வசித்து வரும்  சுப்பி என்பவரின் மாற்றுத்திற னாளி மகள் வீட்டில் கட்டிலில்  படுத்திருந்தார். சுவர் மாறி விழுந்தி ருந்தால் மாற்றுத்திறனாளியின் உயிர் பலியாகி இருக்கும். பகலில்  கனத்த மழை வந்ததால் சுதாரித்து  தப்பித்து விட்டோம். இரவில் வந்தி ருந்தால் குறைந்தது பத்து உயிர் களாவது பலியாய் இருக்கும் என  வேதனைபட தெரிவித்தனர். மேலும் உணவு ,உடை இன்றி நடுத்  தெருவில் இரவு முழுவதும் படுத்தி ருப்பதாக கண்ணீர் மல்க  தெரி வித்துள்ளார். இதில் வீடுகளில் இருந்த கட்டில்,பீரோ, மிக்சி டிவி,  லேப்டாப், சமையலறை பொருட் கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. மாநகராட்சியில் இருந்து மேயரோ ஆணையாளரோ மற்றும் அதிகாரிகளோ இதுவரை  கண்டுகொள்ளாதது பாதிக்கப் பட்டவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.