கடமலைக்குண்டு, மார்ச் 24- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கட மலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய சாகுபடி அதிக அளவில் நடை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகளுக்கு அதிக அள வில் லாபம் கிடைத்தது. எனவே இந்த ஆண்டும் அதிக விலை விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் விவசாயி கள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி செய்தனர். தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் வரை வெங்காயம் கிலோ 10 ரூபாய் வரை விற்பனை யானது. விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், அது படிப்படியாக குறைந்து தற்போது 1 கிலோ வெங்காயம் 5 முதல் 7 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது. இதனால் வெங்காயத்தை அறுவடை செய்து அதனை சந்தைகளில் விற்பனை செய்தாலும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு கூட பணம் கிடைப்ப தில்லை. இதனால் வெங்காயங்களை அறுவடை செய்யா மல் விட்டு விட்டனர். மேலும் சில விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள வெங்காயத்தை செடிகளுடன் சேர்த்து நிலத்தை உழுது வேறு பயிர்கள் நடுவதற்கு தயாராகி வருகின்றனர். கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதால் அரசு சார்பில் நிவா ரணம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.