விருதுநகர், மே 9- விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடை பெற்று வரும் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். நாராணாபுரம் ஊராட்சி யில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தின் கீழ், ரூ.23.57 லட் சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடம், இலட் சுமியாபுரத்தில் ரூ.31.52 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடப் பணி, வாடியூரில் ரூ.14.59 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய உணவு தானியக் கிட்டங்கு, முதலிப்பட்டியில் ரூ.2.40 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள், கல்போது கிராமத்தில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை, வி.சொக்க லிங்காபுரம் எ.டி.காலனி யில் 15 வது நிதிக்குழு மானி யத்தின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பில் குடிநீர் இணைப்பு கள் வழங்கப்படும் பணி ஆகி யவற்றை நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, வாடியூர் கிராம நியாய விலைக்கடையில் பொருட்க ளின் இருப்பு, பொதுமக்க ளுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்புகள் மற்றும் அவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி (கி.ஊ), ராஜ்மோகன் (வ.ஊ), வட்டாட்சியர் லோக நாதன் உட்பட பலர் உடனி ருந்தனர்.