விபத்து தடுப்புப் பணியில் நெடுஞ்சாலைத்துறை
சின்னாளபட்டி, செப்.20- விபத்துத் தடுப்புப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலை நெடுஞ்சாலைத் துறை மூலம் அகலப்படுத்தப்பட்டது. சாலையின் இரு புறமும் மக்கள் நடந்து செல்லும் பிளாட்பாரத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. சாலையின் நடுவே பூச்செடியுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் சாலை விபத்துக்களைத் தடுக்கும் வகையில் சாலையின் நடுவே தடுப்புக்கோடுகள் அமைக்கம் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணியை நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் வீரன், உதவிப் பொறியாளர் தாமரை மாறன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
‘பாராக’ மாறிய பயணிகள் நிழற்குடை
கடமலைக்குண்டு, செப்.20- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை முத்தாலம்பாறை ஊராட்சியில் உள்ளது கருப்பையாபுரம் கிராமம். இந்த கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லை. கிராம மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று கருப்பையாபுரம் விலக்கில் வெயிலில் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்தனர். மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்குடை மது பாராக மாறி விட்டது. இதனால் மக்கள் நிழற்குடையைப் பயன்படுத்து வதைத் தவிர்த்துவிட்டனர். நிழற்குடை முழுவதும் காலி மது பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் தான் குவிந்துள்ளது. காவல்துறையினரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
மாற்றுத்திறனாளிகள் முகாம்
சின்னாளபட்டி, செப்.20- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலு வலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக, வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், 35 கிலோ அரிசி, வீட்டு மனைக்கான இலவசப் பட்டா, ஊக்கத்தொகை, வங்கிக் கடன் உதவி வேண்டி ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மனு அளித்த னர். ஒன்றிய அரசு வழங்கும் தனித்துவ அடையாள அட்டை வேண்டியும் மனுக்கள் அளிக்கப்பட்டது. பயனாளிகளிடமிருந்து மனுக்களை நிலக்கோட்டை சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை உள்ளிட்ட சலுகைகள், அரசு நலத் திட்ட உதவி கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஹ
தூய்மை பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி
கடமலைக்குண்டு, செப்.20- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை காலை தூய்மை பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கட மலைக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா தங்கம் பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், “ வீட்டிலேயே மக்கும் மக்காத குப்பைகள் எனத் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டக் கூடாது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவ-மாணவிகள், ஆசிரி யர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பாரத இயக்கம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கட்டுரைப் போட்டி, மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பேரணியில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் அழகு சிங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலகச் சுற்றுலா தினக் கொண்டாட்டம்
மதுரை, செப்.20- மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய அரசின் சுற்றுலாக் கழகம், தமிழ்நாடு சுற்று லாத்துறை, மதுரை டிராவல்ஸ் கிளப் மற்றும் சூரியன் எப்-எம் இணைந்து மாணவர்களுக்கு சுற்றுலா மற்றும் தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஓவியப்போட்டி கள் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். டிராவல்ஸ் கிளப் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். சூரியன் எப்-எம் தொகுப்பாளர் ஸ்டீபன், மாணவர்களிடையே சுற்றுலாவின் நன்மைகள், தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவங்களைக் காட்சிபடுத்தி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தி னராக எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டார். மதுரை மாவட்ட சுற்றுலா அதிகாரி பாலமுருகன் ஓவியப் போட்டியைத் துவக்கி வைத்தார். ஜே.சி.ரெசி டென்சி இயக்குநர் ரிஷ்வந் ஜெயராஜ், மேராஜ் டிரா வல்ஸ் உரிமையாளர் முஸ்தபா மற்றும் பாலமுருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றப் பொறுப்பாசிரியர் மீர் நாமத்துல்லா இப்ராஹிம் செய்திருந்தார்.
தேனியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தேனி, செப்.20- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம் செப்.22- ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் கிஷான் கடன் அட்டை வழங்க ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளதால் விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது, ஆதார், வங்கிக் கணக்கு நகல், அடங்கல் மற்றும் சிட்டா ஆகிய ஆவணங்களோடு வருகை புரிந்து விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து கொடுத்து பயன்பெறலாம்.
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை சுருளி, கும்பக்கரை அருவிகளில் குளிக்கத் தடை
தேனி, செப்.20- தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் சுருளி மற்றும் கும்பக்கரை அருவி களில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டதால் சுற்றுலாப் பயணி கள் குளிக்க வனத்துறை யினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொட ர்ந்து மழை பெய்து வரு கிறது. இதனால் அணை களுக்கு நீர்வரத்து அதிக ரிக்கத் தொடங்கி உள்ளது. நீர்பிடிப்புப் பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடி யாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் விவசா யத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக் கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கனஅடியாகக் குறைக்கப் பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 118.85 அடியாக உள் ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள் ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந் தது. தற்போது மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை காலை 378 கன அடி நீர் வருகிறது. அணை யில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள் ளது. 84 கன அடி நீர் வரு கிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வரு கிறது. 3 கன அடி நீர் திறக் கப்படுகிறது. கொடைக்கானல் வட்டக் கானல், வெள்ளக்கவி உள் ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்குத் தொட ர்ச்சி மலை அடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி கும்பக்கரை அருவி யில் குளிக்க, சுற்றிப் பார்க்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி யில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வார மாக சுற்றுலாப் பயணி களுக்குத் தடை விதிக்கப்பட் டிருந்தது. தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கே முகாமிட்டுள்ளது மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத் துறையினர் தெரிவித்துள்ள னர். மழையளவு பெரியாறு-2.8, தேக்கடி- 1.4, கூடலூர்-1.6, உத்தம பாளையம்-1.2, சண்முகா நதி அணை-2, போடி-0.6, வைகை அணை-0.6, மஞ்ச ளாறு-3, சோத்துப்பாறை-3, பெரியகுளம்-1.2, வீரபாண்டி -1.2, ஆண்டிபட்டி-6.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
பட்டியலின மக்கள் அதிகம் வசிப்பதால் கிராமப் பெயருடன் “காலனி” என்ற வார்த்தையைச் சேர்க்கக்கூடாது
மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு
மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு மதுரை, செப்.20- அனைத்து அரசுப் பதிவேடுகளிலும் உள்ள எப்.கீழையூர் காலனி என்ற பெயரை நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கின் மீது முதற்கட்ட விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப் பாறையை அடுத்துள்ள எப்.கீழையூர் கிரா மத்தைச் சேர்ந்த ஏ.பிரதீப் என்பவர் தாக் கல் செய்த மனுவில், “எப்.கீழையூரில் வசிப்ப வர்களில் பெரும்பாலானோர் பட்டியல் சாதி யைச் சேர்ந்தவர்கள். இங்கு காலனி என்ற சொல்லைப் பயன்படுத்துவது பாரபட்சம் என்று சுட்டிக்காட்டினார்”. எப்.கீழையூர் 22 குக்கிராமங்களை கொண்டது எப்.கீழையூர் கிராம ஊராட்சி. ஊராட்சித் தலைவர் அனைத்து குக்கிரா மங்களுக்கு பொதுவானவர். தற்போ தைய கிராமத் தலைவர் ஒரு சாதி இந்து. வருவாய் பதிவேட்டின்படி, கிராமத்தின் பெயர் எப். கீழையூர். ஆனால், அதிகாரி கள் காலனி என்ற வார்த்தையைச் சேர்த்து எப்.கீழையூர் காலனி என்று கிராமத்தை குறிப்பிட்டு வருகின்றனர். அவர்கள் கிரா மத்தில் பட்டியலிடப்பட்ட சாதியைச் சேர்ந்த வர்கள் வசிப்பதாகக் குறிப்பிடுகின்றனர். சொத்துவரி ரசீதும் எப்.கீழையூர் காலனி என்றே குறிப்பிடப்படுகிறது.
சமீபத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், கிராமத்தின் பெயருடன் காலனி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள் ளது. கிராம நிர்வாக அலுவலர் அலுவல கத்திலும், அப்படியே குறிப்பிடப்படுகிறது. புதிதாக வழங்கப்பட்ட வாக்காளர் அடை யாள அட்டையிலும், காலனி எனக் குறிப்பி டப்பட்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்தில் மற்றொரு குக்கிராமம் இருப்பதாகவும், அங்கு பெரும்பாலான மக்கள் சாதி இந்துக்கள். இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் தங்கள் கிராமத்தின் பெயர் எப். கீழையூர் என்று குறிப்பிடுகின்றனர் இதை அதிகாரிகள் மறைமுகமாக ஆதரிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறை யிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக் கப்படவில்லை. அனைத்து அரசுப் பதிவேடு களிலும் எப். கீழையூர் என்ற பெயரைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும். பெயர்ப் பலகைகள் மற்றும் அடையாள அட்டைகள் மற்றும் எப். கீழையூர் காலனி என்ற பெயரை நீக்க வேண்டும் என்றும் தமது மனுவில் கூறி யுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு வை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்த ரவு. சம்மந்தப்பட்ட மனு மீது முதற்கட்ட விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.