ஒட்டன்சத்திரம், ஆக.14- வேடசந்தூர் அருகே ரயில் மோதி கிராம நிர்வாக அலுவலர் பலியான நிலையில் இஞ்சினில் இறந்தவரின் உடலுடன் வந்த ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. மைசூரிலிருந்து தூத்துக்குடி நோக்கி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டி ருந்தது. கரூர் - திண்டுக்கல் ரயில்வே சாலை யில் திங்கள்கிழமை காலை எட்டு மணிக்கு வேடசந்தூர் அருகே உள்ள தோப்புப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது ரயில் இஞ்சின் முன்பு ஆண் ஒருவரின் உடல் கிடப்பதைப் பார்த்து ரயில ஓட்டுநர் ரயிலை பாதி வழியில் நிறுத்திப் பார்த்து இது குறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் பலியானவர் உடலை அப்புறப்படுத்தியதைத தொடர்ந்து 35 நிமிடத்திற்கு பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது. காவல்துறை விசாரணையில், இறந்த வர், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சாமிநாதன் (38) என்பவர் என்பது தெரிந்தது. அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள தோப்புப்பட்டிக்கு வந்திருந்தார். ரயில்வே சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவர் ரயில் மோதி இறந்தது தெரிந்தது.