districts

img

தேனி, ஆண்டிபட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

தேனி, ஏப்.9- ஆண்டிபட்டி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சூறைக்காற்று டன் பலத்த மழை பெய்ததால், மாட்டுக் கொட்டகை மேற்பகுதி இடிந்து விழுந்து மாடு கள் காயமடைந்தன. ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொது மக்கள் அவதியடைந்து வந்தனர். கடும் வெயில் காரணமாக சனிக்கிழமை  மாலை சுமார் 4 மணியளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.  காற்று அதிகமாக இருந்ததால் பல்வேறு பகுதிகளில் மர கிளைகள் ஒடிந்து காணப்பட்டன.  சாலைகளி லும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெ டுத்து ஓடியது. இந்நிலையில் ஆண்டிபட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையின் மேற்பகுதியில் அமைக்கப் பட்டிருந்த சிமெண்ட் சீட்டுகள் சூறைக்கா றறால் இடிந்து விழுந்தது.  இந்த மாட்டுக் கொட்டகையில் தினமும் 10க்கும் மேற்பட்ட  மாடுகள் இருக்கும். சூறைக்காற்றால் மாட்டுக் கொட்டகை மேற்பகுதி விழுந்த நிலையில் உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் 3 மாடுகள் காய மடைந்தன. காயமடைந்த மாடுகளுக்கு கிராம மக்கள் முதலுதவி செய்தனர். தேனியில் பலத்த சூறைக்காற்றால் சாலையோரத்தில் மரங்கள் சாய்ந்தன. வடுக பட்டியில் பெய்த சூறாவளி காரணமாக மரம் சாய்ந்தது.