மதுரை, ஜன.2- பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த இயலுமா? என் பது குறித்து அரசிடம் உரிய விளக் கம் பெற்றுத் தெரிவிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தாக் கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருவிழா வாகக் கொண்டாடப்படுகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இலங்கைத் தமிழர்கள் உட்படச் சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள் ளது. இருபது வகையான விவசா யப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பும், வேஷ்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது. இந்த வேஷ்டி, சேலைகளைத் தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என அரசு பாராட்டத் தகுந்த முடிவை எடுத்துள்ளது இது வரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட இருபது வகை யான விவசாயப் பொருட்களை அருகாமை மாநிலங்களிலிருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள் ளன. கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், அந்தக் கடைகள் தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடையாமல், பரிசுத்தொகுப்பைப் பெறுவோ ரும் திருப்தி அடையாத நிலை உள் ளது.
அரசின் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமி ழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயி கள் பலனடைவர். தரமான பொருட் களும் கிடைக்கும், பரிசு தொகுப்பு பெறுவோரும் மகிழ்ச்சி அடை வார். இதைப் பரிசீலிக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே பொங்கல் பரிசுத் தொகுப் பில் வழங்கப்படக் கூடிய, பொருட் களில் தமிழகத்தில் விளையும் பொருட்களைத் தமிழக விவசாயி களிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறி யிருந்தார். இந்த வழக்கு திங்களன்று நீதி பதிகள் கிருஷ்ணகுமார், விஜய குமார் அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் குறுகிய காலமே இருப்பதால் வங்கிக் கணக்குகளில் செலுத்து வதற்கான நடவடிக்கையை முன் னெடுப்பது கடினம். மினிமம் பேலன்ஸ் எனக்கூறி சில வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அதோடு மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால், அவற்றைப் பிரிப்ப திலும் சிக்கல் உள்ளது” எனத் தெரி விக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் மின் இணைப்புகளோடு ஆதாரை இணைக்கும் பணியைப் போல, இந்தப் பணியையும் செய்யலாமே? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டு தாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா? என்பது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.