பூவார், செப்.18- ஒன்றிய பாஜக ஆட்சியில் நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றுள் ்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன் குற்றம்சாட்டினார். பொருளாதாரத்தில் நசுக்கி கேரளத்தை அழிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட் ்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவளம் தொகுதிக்குழு சார்பில் செப்டம்பர் 17 ஞாயிறன்று தர்ணா நடைபெற்றது. கட்சியின் தொகு திச்செயலாளர் பி.எஸ்.ஹரிகுமார் தலைமை வகித்தார். இந்த தர்ணாவை துவக்கி வைத்து இ.பி.ஜெயராஜன் பேசிய தாவது: ஒன்றிய மோடி அரசின் நோக்கம் வகுப்புவாதத்தை வளர்ப்பது மட்டுமே. நாட்டில் அனைத்து துறை களிலும் மக்களின் வாழ்க்கை கடினமாகிவிட்டது. விவசாயத் துறை அழிந்தது. 12.5 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவசாயிகளின் கடன்கள் ஒரு ரூபாய் கூட குறைக்கப்பட வில்லை.
மீண்டும், கார்ப்பரேட்டு களின் ரூ.2.25 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்ய முயற்சிக்கின்ற னர். பெட்ரோலியப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டது. நூறுநாள் வேலைத் திட்டத்திற்கான நிதியைக்கூட வெட்டுகின்றனர். நாடு மோதல்களின் களமாக மாறியுள்ளது. பாஜக ஆளும் அனை த்து மாநிலங்களிலும் அமைதி சீர்குலைந்துள்ளது. கேரளாவில் இடதுசாரி மனப்பான்மை உள்ள தால் மக்கள் சகோதரர்கள் போல் வாழ்கின்றனர். கேரளாவில் உள்ள மக்கள் அரசை அழிப்பதே ஒன்றிய ஆட்சி யாளர்களின் நோக்கம். அரசுக்கு செலுத்த வேண்டிய நிதி ஒதுக்கீடு களை நிறுத்தி வைப்பதுடன், கடன் வாங்க அனுமதியும் மறுக்கப் பட்டது. ஆனால் இதற்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டிய ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) மௌனம் காத்து பாஜக வுடன் உள்ளது. ஓணம் பண்டிகைக்கு கேரள மக்கள் வறுமையில் வாடுவார்கள் என்று யுடிஎஃப் பிரச்சாரம் செய்தது. கேரளா பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படும் போதும், மக்கள் நலனில் இருந்து மாநில அரசு பின்வாங்கவில்லை. கேர ளாவை அழிக்கும் பாஜகவின் முயற்சிகளை மக்கள் ஒற்றுமை யாக எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.