districts

img

10 ஆண்டு கால தலைவரை தோற்கடித்த கட்டுமான தொழிலாளி

அருமனை, பிப்.23- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் 10 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் சி.பி.சுஜி. பாஜக வைச் சேர்ந்த இவர் இம்முறை யும் பண பலத்தோடு ஒன்றாவது வார்டில் போட்டியிட்டார். சாதி யைச் சொல்லியும், மதத்தைச் சொல்லியும் ஓட்டு கேட்டார்.  இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அருமனை வட்டா ரக்குழு உறுப்பினரும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வட்டார நிர்வாகியுமான நெல்சன் போட்டியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இவர் கடந்த 30 ஆண்டு காலமாக மக்கள் பணி யாற்றியவர். இவர் கூறும்போது, நான் இதுவரையிலும் தேர்தலில் போட்டியிட்டது இல்லை.  தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள் ளேன். எனது வார்டில் இருக்கும் மக்களுக்காக அரசிடமிருந்து வரும் திட்டங்களை பெற்று தருவேன், வார்டு வளர்ச்சிக்காக வும், மக்களின் பிரச்சனைக ளுக்கும் உடனடி தீர்வு காண செயல்படுவேன் என கூறினார்.