திருநெல்வேலி, பிப்.17- பாளையங்கோட்டை தியாக ராஜநகர் 55வது வார்டில் போட்டி யிடும் சிபிஎம் வேட்பாளர் முத்து சுப்ரமணியன் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார். வியாழக்கிழமை மாலை பேரணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது. இந்த பேரணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரணியில் வேட்பாளர் முத்து சுப்பிரமணியன், சிபிஎம் முன் னாள் மாவட்டச் செயலாளர் வீ. பழனி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.எஸ்.செண்பகம், பீர்முகம்மது ஷா, வழக்கறிஞர் கு.பழனி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கட்சி தோழர்கள், இடைகமிட்டி செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.