districts

அமிர்தா எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

ஒட்டன்சத்திரம், ஜூன் 20- மதுரையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும்  அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில்  நிலையத்தில் நின்று சென்றது. இதனை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி கொடி அசைத்து வரவேற்றார்.  உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான நான் இருவரும் டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து கடிதம் வாயிலா கவும், நேரிலும் பல முறை வலியுறுத்தியதன் பேரில்  ஒன்றிய ரயில்வே அமைச்சர் அனுமதி அளித்ததினால் ஒட்டன்சத்திரத்தில் அமிர்தா எஸ்கிரஸ் ரயில் நின்று செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தெரி வித்தார். தற்பொழுது மூன்று மாத காலத்திற்கு சோதனை  ஓட்டமாக நின்று செல்லும் இந்த அமிர்தா எக்ஸ்பிரஸ்  இரயில் சேவையினை ஒட்டன்சத்திரம் தொகுதி பொது மக்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் பயன் படுத்தி ரயில் சேவையை தொடர்ந்து நின்று செல்ல ஆதரவளிக்க வேண்டும் என்றார்.