மதுரை, அக்.19- மதுரையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் டெப் போக்களுக்கு 50 சதவீத பால் பாக்கெட்டுகள் மட்டுமே விநி யோகம் செய்யப்படுவதாக வும் விளக்கம் கேட்டால் அதிகாரிகள் மிரட்டுவதாக வும் முகவர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். மதுரை ஆவின் நிறுவ னத்திற்கு சொந்தமான பால் பண்ணை மூலமாக ஆவின் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது, மதுரை மாவட்டத்தில் 390 பால் டெப்போக்கள் மூல மாக பாக்கெட் பால் விற் பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டருக்கு அதி கமான பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது பால் கொள்முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்ட ராக குறைந்துள்ளது, நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் குறை வால் கடந்த திங்களன்று காலை மதுரையில் பல்வேறு பகுதிகளில் பால் வினியோ கம் செய்ய மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதனைக் கண் டித்து முகவர்கள் ஆவின் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் புத னன்று பல்வேறு ஆவின் பால் டெப்போக்களுக்கு வழங்க வேண்டிய பால் பாக்கெட்க ளில் 50 சதவீதம் மட்டுமே விநி யோகிக்கப்பட்டதாக முக வர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து ஆவின் பால் பண்ணைக்கு நேரில் சென்று கேட்டபோது அதி காரிகள் மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் முகவர்களி டம் பெற்ற டெபாசிட் தொகைக்கான ஆவின் பால் பாக்கெட்டுகளை கூட விநி யோகம் செய்யவில்லை என் றும் தெரிவித்தனர். ஆவின் நிறுவனத்தின் செயல்பாடு என்பது தனியார் பால் முகவர்களுக்கு ஆதர வாக செயல்படுவதாக உள் ளது என்று தெரிவித்தனர் . எனவே ஆவின் நிர்வாக மும் தமிழக அரசும் உடனடி யாக நடவடிக்கை எடுத்து பால் முகவர்களுக்கு வழங்க வேண்டிய பால் பாக்கெட்டு களை தங்கு தடை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.