districts

img

இளையான்குடியில் சிபிஎம் சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்

சிவகங்கை, மார்ச் 10-  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி 11-ஆவது வார்டு பகுதியில் சிபிஎம் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி 11-ஆவது வார்டில் திமுக கூட்ட ணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ராஜீ போட்டியிட்டு, 332 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்க ளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கிளைச் செயலாளர் பரி சுத்த மங்கள சாமி தலைமையில் மலைராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தண்டி யப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் முத்துராமலிங்க பூபதி, கருப்பு சாமி, ஏ.ஜே.சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் அழகர்சாமி, திருநாவுக்கரசு, பொன்னுசாமி ஆகியோர் பேசினர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் செங்கொடியை ஏற்றி னார்.