மதுரை,மே 7- தருமபுரம் பட்டின பிரவேசம் விவ காரத்தில் பழமைவாதம் உதிரும் போது இதுபோன்ற சத்தம் ஏற்படும் என்றும் மடாதிபதிகளின் பழக்கவழக்கம் சம்பிரதாயம் சடங்குகளை விட நாட்டின் அரசியல் சாசன சட்டம் மேலானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார். மதுரையில் மே 6 வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு குடிமனை கோரி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி., செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: பல்வேறு வகைமை நிலங்களில் குடியிருப்போருக்கு குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என 5 ஆயிரம் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அதிகாரத்திற்குட்பட்டு முடி வெடுக்க வேண்டிய நில வகைகளில் விரைந்து முடிவெடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். ஆன்மீக தலைவர்கள் அரசியல் பேச களத்திற்கு வந்துவிட்டால் அரசி யல் எதிர்வினை என்ற அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படும். மடாபதிகள் மற்றும் ஆதீனங்களுக்கு பல்வேறு பழக்க வழக்கங்கள், சம்பிர தாயங்கள், சடங்குகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் விட நாட்டின் அரசியல் சாசன சட்டம் மேலானது. அதற்கு மடாதிபதிகளும், ஆதீ னங்களும் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தங்களை உட்படுத்திக்கொண்டுதான் எல்லா மடாதிபதிகளும் வந்துள்ளனர். சன்னியாசி தர்மப்படி சாதுக்கள், ஆதீனங்கள் எங்கே போனாலும் நடந்து தான் போக வேண்டும், ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட வேண்டும், அதையும் பிச்சையெடுத்துதான் சாப்பிட வேண்டும். அதனை ஓடும் நீரில் கழுவி சுவையில்லாமல் சாப்பிட வேண்டும் என உள்ளது. இதையெல் லாம் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்றால், இல்லை. அதை பின்பற்ற வேண்டும் எனவும் நாங்கள் கூறவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி விட்டார்கள். எல்லோரும் மாறிக்கொண்டுள்ளனர். அதைத்தான் அரசும் சொல்கிறது.காலத்திற்கேற்ப மனிதனை மனிதன் தூக்கும் அடிமைத்தனம் மாற வேண்டும். பழமை வாதம் உதிரும் போது இந்தச் சத்தம் ஏற்படும். ஜன நாயகம் இந்த சத்தத்தை மீறி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.