விருதுநகர், ஆக.31- ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடை பெறும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பணி யாற்றும் ஆசிரியர்களை பி.ட் படிக்கும் மாணவர்களை வைத்து மதிப்பீடு செய்வ தைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பரமசிவம் நிர்வாகிகள் ராமமூர்த்தி, செல்வகணேஷ், அமலராஜன், ஆறுமுகப் ‘பெருமாள் உட்படப் பலர் பங்கேற்றனர்.